Friday, February 17, 2012

19 .02 .2009 - உயர்நீதிமன்றத்தில் காவல் துறையின் கொடூர தாக்குதலுக்கு தீர்வு கிடைக்குமா ?


சென்னை உயர் நீதிமன்றத்தை சாட்டர்டு ஹை கோர்ட் என்று நீதிபதிகளும் , வழக்கறிஞர்களும் பெருமைப்பட்டு கொள்வார்கள். ஆனால் அந்த பெருமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்தது தமிழக காவல் துறை. பிப்ரவரி 19 , 2009 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த காவல்துறை வழக்கறிஞர்கள் , நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள், கட்சிகாரர்கள், மீடியா ரிப்போர்ட்டர்கள் ஆகிய அனைவரின் மண்டைகளையும் உடைத்தது. காட்டுமிரண்டிதனமாக பலரையும் கொடும்காயம் ஏற்படும் வகையில் தாக்கியது. நீதிமன்ற வளாகங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் , நூலகங்கள், வழக்கறிஞர் அலுவலகங்கள் என அனைத்தையும் உடைத்து நொறுக்கி சூறையாடியது. உலக மக்கள் அனைவரும் நேரடி ஒளிபரப்பாக தொலைகாட்சியில் பார்க்கவே இந்த அனைத்து அட்டகாசங்களையும் காட்டுமிராண்டிதனமான தமிழக காவல் துறை அரங்கேற்றியது.

Thursday, February 16, 2012

பிப்ரவரி 19 - கருப்பு தினம்


2009 பிப்ரவரி 19 ல் விழுந்த அடியின் காயம் வேண்டுமானால் ஆறிப்போயிருக்கலாம்; ஆனால் அந்த அவமானம் மறந்து போயிருக்குமேயானால் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்குக்  கூட தகுதி அற்றவர்களாகி விடுவோம். காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல் தற்செயலான  விஷயம் அல்ல. அது ஆளும் அரசாங்கத்தின் உச்சகட்ட கோரதாண்டவம். அரசு என்றால் காவல் துறையும் , ராணுவமும் தான் நீதி மன்றங்களும் ,நீதிபதிகளும் ,  வழக்கறிஞர்களும்  காவல் துறையின் குண்டந்தடிக்கு கட்டுப்பட்டவர்கள், என்று நமக்கு கண்முன்னே நடத்தி காட்டிய நிகழ்ச்சி அது. 
 

Total Pageviews