Thursday, March 15, 2012

அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்


பஸ் கட்டண உயர்விற்கு பிறகு பயணம் என்பதே அவ்வளவு இனிமையானதாக சாதாரண மக்களுக்கு இல்லாமல் போயுள்ள இந்த சூழ்நிலையில் பின்வரும் இடர்களையும் சாதாரண மக்கள் சந்திக்க வேண்டி உள்ளது. அவை ;
அரசு பேருந்துகள்:
1.சரியான மாற்றுப் பேருந்து வசதி இல்லை.
2.பேருந்துகள் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை.
3. தொலைதூரப்பேருந்துகளில் இடையில் இறங்கும் பயணிகளை ஏற்ற மறுப்பது.
4. இரண்டு ஓட்டுனர்களை பணியில் அமர்த்தாதது.

Friday, February 17, 2012

19 .02 .2009 - உயர்நீதிமன்றத்தில் காவல் துறையின் கொடூர தாக்குதலுக்கு தீர்வு கிடைக்குமா ?


சென்னை உயர் நீதிமன்றத்தை சாட்டர்டு ஹை கோர்ட் என்று நீதிபதிகளும் , வழக்கறிஞர்களும் பெருமைப்பட்டு கொள்வார்கள். ஆனால் அந்த பெருமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்தது தமிழக காவல் துறை. பிப்ரவரி 19 , 2009 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த காவல்துறை வழக்கறிஞர்கள் , நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள், கட்சிகாரர்கள், மீடியா ரிப்போர்ட்டர்கள் ஆகிய அனைவரின் மண்டைகளையும் உடைத்தது. காட்டுமிரண்டிதனமாக பலரையும் கொடும்காயம் ஏற்படும் வகையில் தாக்கியது. நீதிமன்ற வளாகங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் , நூலகங்கள், வழக்கறிஞர் அலுவலகங்கள் என அனைத்தையும் உடைத்து நொறுக்கி சூறையாடியது. உலக மக்கள் அனைவரும் நேரடி ஒளிபரப்பாக தொலைகாட்சியில் பார்க்கவே இந்த அனைத்து அட்டகாசங்களையும் காட்டுமிராண்டிதனமான தமிழக காவல் துறை அரங்கேற்றியது.

Thursday, February 16, 2012

பிப்ரவரி 19 - கருப்பு தினம்


2009 பிப்ரவரி 19 ல் விழுந்த அடியின் காயம் வேண்டுமானால் ஆறிப்போயிருக்கலாம்; ஆனால் அந்த அவமானம் மறந்து போயிருக்குமேயானால் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்குக்  கூட தகுதி அற்றவர்களாகி விடுவோம். காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல் தற்செயலான  விஷயம் அல்ல. அது ஆளும் அரசாங்கத்தின் உச்சகட்ட கோரதாண்டவம். அரசு என்றால் காவல் துறையும் , ராணுவமும் தான் நீதி மன்றங்களும் ,நீதிபதிகளும் ,  வழக்கறிஞர்களும்  காவல் துறையின் குண்டந்தடிக்கு கட்டுப்பட்டவர்கள், என்று நமக்கு கண்முன்னே நடத்தி காட்டிய நிகழ்ச்சி அது. 

Sunday, December 18, 2011

ஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம், தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்!



இன்று அரசு இயந்திரம் முழுவதும் ஊழல் சேற்றில்  முழுவதுமாக சிக்கி கிடக்கிறது. இந்தியாவில்  முதல் அமைச்சர்கள் , மந்திரிகள் , எம்.எல்.ஏ.கள் , எம்.பி.கள் ஆகிய அனைத்து பதவிகளில் இருப்பவர்களும் ஊழலில் ஊற்றுக்கண்களாக இருக்கிறார்கள். ஆயிரம் , பத்தாயிரம் ,லட்சம் என்பதெல்லாம் தாண்டி 1 லட்சம் கோடி என்ற அளவிற்கு இன்று அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். நாட்டின் இயற்கை வளங்களை தங்கள் இஷ்டத்திற்கு சூறையாடுகின்றனர்.இவ்வாறு நாட்டின் சாதரண மக்களுக்கு சேரவேண்டிய அரசின் நலத்திட்டத்தின் பயன்கள் உரியவர்களுக்கு சென்று சேராமல் ஒரு சிலரின் பாக்கெட்டில் லஞ்சமாக குவிகின்றது. 

Sunday, March 20, 2011

தியாகி பகத்சிங்கின் நினைவு நாளை அனுசரிப்போம்


பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவான அனைத்து வகை ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல்களிலிருந்தான விடுதலையை காங்கிரஸ் தலைமையிலான விடுதலைப் போராட்டம் சாதிக்கத் தவறிவிட்டது. வெள்ளை முதலாளிகள் இருந்த இடத்தில் கறுப்பு முதலாளிகள் அமர்ந்து தங்களது சுரண்டல் வேட்டையை தொடர அது வழிவகுத்தது. இந்நிலையில் அனைத்து முதலாளித்துவ சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்பி உருவாக்கப்பட்ட பகத்சிங்கின் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மி ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக மலர்ந்தது, உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த விடுதலையை சாதிப்பதற்க்கு முன்பே வெள்ளை ராணுவம் பகத்சிங் மற்றும் அவர்களது தோழர்களின் இன்னுயிரை கொள்ளை கொண்டு விட்டது. தியாகி பகத்சிங் விட்ட பணி தொடர இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டவர்கள் தவறி விட்டனர். தொடரும் சுரண்டலை முடிவுக்கு கொண்டு வர அவரது தியாகத் திருத்தடங்களில் நடை பயில்வோம்.

Saturday, March 12, 2011

தகவல் அறியும் உரிமை சட்டத்தை முடக்க முயற்சி செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது


தகவல் உரிமை ஆணையர்கள் நியமனத்தில் முறைகேடு

தகவல் ஆணையர்கள் நியமனத்தில் எதிர்கட்சி தலைவரும் முக்கியபங்காற்றுவார். ஆனால் தமிழக அரசோ அவரசர அவசரமாக தங்களுக்கு சாதகமானவர்களை தெரிவு செய்தது. அதுவும் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான மார்ச் 1-ம் தேதி . தமிழக அரசு பி.ஏ. ராமய்யா, சி. மனோகரன், ஏ. ஆறுமுக நயினார் ஆகியோரை தமிழகத் தகவல் ஆணையர்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. தகவல் ஆணையர்கள் நியமனங்களில் விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களின் நியமனங்கள் தொடர்பான நடைமுறையில் எதிர்க்கட்சித் தலைவர் புறக்கணிக்கப்படுள்ளார்.எதிர் கட்சி தலைவருக்கு உரிய வாய்ப்பு வழங்காமலையே இந்த உத்தரவு பிரப்பிக்கப்படுள்ளது.ஆகையால் , தற்போது நியமிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட மூவரும் தகவல் ஆணையர்களாகச் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அவர்களின் நியமனங்கள் தொடர்பான அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி விஜயலட்சுமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தகவல் ஆணையர்கள் முறைகேடான நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு தான் கருணாநிதிக்கு சாதகமான ஸ்ரீபதி தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது எந்த தகுதியும் இல்லாத இந்த ஆணையர்கள் ஆளும் கட்சி விசுவாசத்திற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கே சமாதி கட்டும் வேலையை இந்த அரசு செய்துள்ளது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.

Wednesday, February 16, 2011

கருப்பு தினம் - பிப்ரவரி 19





2009 ல் விழுந்த அடியின் காயம் வேண்டுமானால் ஆறிப்போயிருக்கலாம் ஆனால் அந்த அவமானம் மறந்து போயிருக்குமேயானால் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்கு கூட தகுதி ஆற்றவர்களாகி விடுவோம். காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல் எதேச்சையான விஷயம் அல்ல. அது ஆளும் அரசாங்கத்தின் உச்சகட்ட கோரதாண்டவம் அரசு என்றால் காவல் துறையும் ,ராணுவமும் தான் நீதி மன்றங்களும் ,நீதிபதிகளும் , வழக்கறிங்கர்களும் காவல் துறையின் கட்டுப்பட்டவர்கள், என்று நமக்கு கண்முன்னே நடத்தி காட்டிய நிகழ்ச்சி. அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த நீதி துறைக்கு எதிராக நடந்த இந்த தாக்குதலில் மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் வழக்கு தொடுத்து தீர்வு தேடித்தரும் வழக்கறிங்கர்கள் தங்கள் சமுதாய மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு ஒரு கடைநிலை காவல் துறையினரை கூட சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியவில்லை என்பது மிகவும் அவமானகரமான விஷயம் ஆகும். இனியும் பொறுமை காத்து இருப்போமானால் நம்மை வரலாறு சுரணையற்றவர்கலாகவே பதிவு செய்யும்.

Sunday, February 13, 2011

Govt has funds for freebies, not courts: CJ fumes


Pulling up the state government for not providing basic amenities in subordinate courts even though it was spending heavily on freebies, Madras high court Chief Justice M Y Iqbal on Friday directed it to provide sufficient tables, chairs and water and toilet facilities at the George Town court in two weeks. He gave the direction after a surprise visit to the court on Friday.

A three-judge bench, headed by the Chief Justice, took up suo motu the issue of deficiency in facilities at the complex. During the hearing, Justice Iqbal said the court halls were very small and cramped and the furniture old and damaged. There were no chairs for advocates and they were forced to use plastic stools and benches.

"There is only one toilet and no one can go near it. There is no toilet for undertrials and the litigant public.

Friday, February 4, 2011

Six corrupt CJIs named by Prashant Bhushan



Prashant Bhushan recently submitted a supplementary affidavit in the Supreme Court of India where he has submitted evidence to back his allegations that “half of the last 16 Chief Justices have been corrupt.”

Bhushan has admitted that getting documentary evidence of corruption in the higher judiciary is difficult. Despite this, his historic affidavit throws light on blatant corruption in the top echelons of the Indian judiciary.

The affidavit also lists instances of how impeachment motion could not be brought against some CJIs. The reason, Bhushan states, is the reluctance of MPs to sign an impeachment motion against a sitting judge of the Supreme Court or a sitting Chief Justice of a High Court (despite documentary evidence of serious charges of misconduct). This is because of a fear of judicial backlash against the MP or his political party, most of whom have cases pending in the courts.

Saturday, August 28, 2010

உமாசங்கருக்கு ஆதரவாக எழும்பும் குரல்கள் அனைத்தும் ஓன்று திரண்டு ஊழலுக்கு எதிரான இயக்கமாக மலர வேண்டும்.





உமாசங்கருக்கு ஆதரவாக எழும்பும் குரல்கள் அனைத்தும் ஓன்று திரண்டு ஊழலுக்கு எதிரான இயக்கமாக மலர வேண்டும்.

கருணாநிதியின் ஆட்சியின் ஊழல்களை திரை கிழித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பணி இடைநீக்கத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம்.


உழைக்கும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள்
சாதாரண உழைக்கும் மக்கள் பாதிக்கப்படும் போதும், இலங்கை தமிழர்கள் கொடூரமாக பேரினவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட போதும், அது காவிரி நீர் பிரச்னையாக இருந்தாலும் , சாதாரண மக்களின் உரிமைகளை பறிக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும் , காவல் துறை அராஜகமாக செயல்பட்ட போதும், ஜனநாயகத்தை பாதுகாக்க எழும்பும் முதல் கண்டன குரல் வழக்கறிஞர்களின் குரலாகத்தான் இருக்கும். வழக்கறிஞர்களுக்கு காப்பு நிதி ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தபட வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் நீண்ட காலக்கோரிக்கை. அதற்காக திரைதுறையினரை போலவோ, மற்ற அரசு துறைகளை போலவோ முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தியோ , கோரிக்கை மனு கொடுத்தோ தங்கள் காரியத்தை வழக்கறிஞர்கள் ஒரு போதும் சாதித்து கொண்டதில்லை, அந்த தார்மிக முதுகெலும்பு தான் இன்றும் கொஞ்சமாவது ஏழைகள் நீதிமன்றம் சென்று நீதி பெற முடிகிறது என்றால் அதற்கு காரணமாக இருக்கிறது. இன்று தீங்கியல் சட்டம் என்று ஒரு சட்டம் தொகுக்கப்பட்ட முந்தய வழக்குகளை கொண்டுள்ளது அதற்கும், அது போல பல மக்கள் நலச்சட்டங்கள் உருவாக காரணமாகவும் , மனித உரிமை எங்கு மீறப்பட்டாலும் அதற்கு ஆதரவாகவும் , ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதிலும், சமூகம் சீர்திருத்த படவேண்டும் என்பதில் அக்கறையும் , பொது நல வழக்குகள் மூலம் அரசின் தவறான போக்குகளை நீதிமன்றகளில் தட்டி கேட்கவும், பல ஊழல்களை வெளிக்கொணரவும், அரசின் தவறான கொள்கை முடிவை கொஞ்சமாவது தட்டி கேட்கவும் முடிகிறது என்றால் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூடிய சில வழக்கறிஞர்கள் உள்ளதால் தான், இன்று பணம் இல்லாதவர்களும் கூட தைரியமாக நீதிமன்ற படிக்கட்டுகளை நீதி கேட்டு மிதிக்க முடிகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதை போல தான் எல்காட் ஊழல், கல்குவாரி ஊழல், கப்பல் கம்பனி ஊழல், சுமங்கலி கேபிள் விசன் மூலம் அரசு கேபிளுக்கு 300 கோடி நஷ்டம் போன்றவற்றை வெளிக்கொணர்ந்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

Saturday, August 21, 2010

சட்டக்கல்லூரி மாணவர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர தாக்குதலும், சென்னையை ஸ்தம்பிக்க வைத்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டமும் .


அசோக்குமாரை தாக்கிய காவல்துறை
17.08.2010 செவ்வாய் கிழமை அன்று சென்னை சட்ட க்கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர் அசோக் குமார் செங்கல்பட்டு அருகே உள்ள திருக்களுக்குன்றம் என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்களால் கொடுரமாக தாக்கப்பட்டு, மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவர் 'தமிழக மக்கள் உரிமை கழகத்தின்' காஞ்சிபுர மாவட்ட பொறுப்பாளர் என்பதும் அவர் காவல் துறையின் அத்துமீறல்களை பலமுறை கண்டித்திருக்கிறார் என்பதும் காவல்துறை அந்த மாணவரை பலி வாங்க காத்திருந்தது என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் அடித்த அடியில் மேல்தாடையில் பல் உடைந்திருக்கிறது , உதடு கிழிந்திருக்கிறது , பாதத்தில் தோல் உரிந்திருக்கிறது , தலை, தொடை, கழுத்து, என உடம்பில் பல பாகாங்களில் காட்டுமிறாண்டிதனமாக தாக்கி உள்ளனர்.

Monday, August 16, 2010

ஏழைகளின் பக்கம் யார் இருக்கிறார்கள்?


யாருக்காக கிடைத்தது சுதந்திரம்

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் சேர்த்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்திய அரசால் முன்பு இயற்றப்பட்ட பல சட்டங்கள் ஒரு சம நிலையை உருவாக்கவே பயன்பட்டன. தொழில் தகராறு சட்டம் மற்றும் பல தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாலர்களுக்கு உரிய உரிமையை வழங்கும் அதே சமயம் முதலீடு செய்யும் தொழில் அதிபர்களையும் பாதிக்கா வண்ணம் இருக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அனைத்தும் இருந்தும் அதனை செயல்படுத்தும் அரசு நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவது ஏன்? என்று பலரும் யோசிப்பதில்லை .

Friday, August 6, 2010

போபால் விசவாயு வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் யதார்த்தம்

“ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அழிந்தாலும் கூடப் பரவாயில்லை; ஒரு பணக்காரன் அல்லது அதிகாரி கூடப் பாதிக்கப்படக் கூடாது”

விபத்து நடந்து 26 ஆண்டுகளுக்குப் பின்பு போபால் விசவாயுக் கசிவு வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கும் உயிரினங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலின் அழிவிற்கும் மாசுபடுதலுக்கும் காரணமாக இருந்த அந்த துயர நிகழ்வின் குற்றவாளிகள் 7 பேருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உடனேயே அவர்கள் ஜாமின் கொடுத்து சிறைக்குச் செல்லாமல் வெளியிலும் வந்துவிட்டனர். இந்த விபத்திற்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்திய பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு மற்றும் இந்திய அரசின் கூட்டு முதலீட்டில் உருவான நிறுவனம் ஆகும்.

சந்தைச் சரக்காகக் கல்வியைத் தரம் தாழ்த்திக் கொண்டிருக்கும்,

கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தோழர் ஆனந்தன் ஆற்றிய உரையின் சாராம்சம்:

இந்தக் கருத்தரங்கில் பல கல்விமான்கள் கலந்து கொண்டுள்ளனர். கல்வி குறித்த அவர்களின் கருத்துக்கள் இரு தன்மைகளைக் கொண்டவையாக இருக்கும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன. ஒன்று கல்வி என்றால் என்ன என்பது குறித்த சித்தாந்தபூர்வக் கருத்தோட்டம். மற்றொன்று தற்போது நடைமுறையில் வழங்கப்படும் கல்வி எவ்வாறு முன்பிருந்ததைக் காட்டிலும் சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது; அதனைக் குறைந்த பட்சம் முன்பிருந்த அளவிற்காவது காப்பாற்ற வேண்டும் என்ற கண்ணோட்டம். இவ்விரண்டில் முன்னதை கல்வியாளர்களின் கருத்துக்கே முழுமையாக விட்டுவிட்டுப் பின்னதை மட்டும் எடுத்துப் பேசுவது எனக்குச் சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

Friday, June 25, 2010

தமிழ் உயர் நீதிமன்ற மொழி

 

Total Pageviews