Saturday, August 28, 2010

உமாசங்கருக்கு ஆதரவாக எழும்பும் குரல்கள் அனைத்தும் ஓன்று திரண்டு ஊழலுக்கு எதிரான இயக்கமாக மலர வேண்டும்.





உமாசங்கருக்கு ஆதரவாக எழும்பும் குரல்கள் அனைத்தும் ஓன்று திரண்டு ஊழலுக்கு எதிரான இயக்கமாக மலர வேண்டும்.

கருணாநிதியின் ஆட்சியின் ஊழல்களை திரை கிழித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பணி இடைநீக்கத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம்.


உழைக்கும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள்
சாதாரண உழைக்கும் மக்கள் பாதிக்கப்படும் போதும், இலங்கை தமிழர்கள் கொடூரமாக பேரினவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட போதும், அது காவிரி நீர் பிரச்னையாக இருந்தாலும் , சாதாரண மக்களின் உரிமைகளை பறிக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும் , காவல் துறை அராஜகமாக செயல்பட்ட போதும், ஜனநாயகத்தை பாதுகாக்க எழும்பும் முதல் கண்டன குரல் வழக்கறிஞர்களின் குரலாகத்தான் இருக்கும். வழக்கறிஞர்களுக்கு காப்பு நிதி ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தபட வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் நீண்ட காலக்கோரிக்கை. அதற்காக திரைதுறையினரை போலவோ, மற்ற அரசு துறைகளை போலவோ முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தியோ , கோரிக்கை மனு கொடுத்தோ தங்கள் காரியத்தை வழக்கறிஞர்கள் ஒரு போதும் சாதித்து கொண்டதில்லை, அந்த தார்மிக முதுகெலும்பு தான் இன்றும் கொஞ்சமாவது ஏழைகள் நீதிமன்றம் சென்று நீதி பெற முடிகிறது என்றால் அதற்கு காரணமாக இருக்கிறது. இன்று தீங்கியல் சட்டம் என்று ஒரு சட்டம் தொகுக்கப்பட்ட முந்தய வழக்குகளை கொண்டுள்ளது அதற்கும், அது போல பல மக்கள் நலச்சட்டங்கள் உருவாக காரணமாகவும் , மனித உரிமை எங்கு மீறப்பட்டாலும் அதற்கு ஆதரவாகவும் , ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதிலும், சமூகம் சீர்திருத்த படவேண்டும் என்பதில் அக்கறையும் , பொது நல வழக்குகள் மூலம் அரசின் தவறான போக்குகளை நீதிமன்றகளில் தட்டி கேட்கவும், பல ஊழல்களை வெளிக்கொணரவும், அரசின் தவறான கொள்கை முடிவை கொஞ்சமாவது தட்டி கேட்கவும் முடிகிறது என்றால் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூடிய சில வழக்கறிஞர்கள் உள்ளதால் தான், இன்று பணம் இல்லாதவர்களும் கூட தைரியமாக நீதிமன்ற படிக்கட்டுகளை நீதி கேட்டு மிதிக்க முடிகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதை போல தான் எல்காட் ஊழல், கல்குவாரி ஊழல், கப்பல் கம்பனி ஊழல், சுமங்கலி கேபிள் விசன் மூலம் அரசு கேபிளுக்கு 300 கோடி நஷ்டம் போன்றவற்றை வெளிக்கொணர்ந்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

Saturday, August 21, 2010

சட்டக்கல்லூரி மாணவர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர தாக்குதலும், சென்னையை ஸ்தம்பிக்க வைத்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டமும் .


அசோக்குமாரை தாக்கிய காவல்துறை
17.08.2010 செவ்வாய் கிழமை அன்று சென்னை சட்ட க்கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர் அசோக் குமார் செங்கல்பட்டு அருகே உள்ள திருக்களுக்குன்றம் என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்களால் கொடுரமாக தாக்கப்பட்டு, மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவர் 'தமிழக மக்கள் உரிமை கழகத்தின்' காஞ்சிபுர மாவட்ட பொறுப்பாளர் என்பதும் அவர் காவல் துறையின் அத்துமீறல்களை பலமுறை கண்டித்திருக்கிறார் என்பதும் காவல்துறை அந்த மாணவரை பலி வாங்க காத்திருந்தது என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் அடித்த அடியில் மேல்தாடையில் பல் உடைந்திருக்கிறது , உதடு கிழிந்திருக்கிறது , பாதத்தில் தோல் உரிந்திருக்கிறது , தலை, தொடை, கழுத்து, என உடம்பில் பல பாகாங்களில் காட்டுமிறாண்டிதனமாக தாக்கி உள்ளனர்.

Monday, August 16, 2010

ஏழைகளின் பக்கம் யார் இருக்கிறார்கள்?


யாருக்காக கிடைத்தது சுதந்திரம்

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் சேர்த்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்திய அரசால் முன்பு இயற்றப்பட்ட பல சட்டங்கள் ஒரு சம நிலையை உருவாக்கவே பயன்பட்டன. தொழில் தகராறு சட்டம் மற்றும் பல தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாலர்களுக்கு உரிய உரிமையை வழங்கும் அதே சமயம் முதலீடு செய்யும் தொழில் அதிபர்களையும் பாதிக்கா வண்ணம் இருக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அனைத்தும் இருந்தும் அதனை செயல்படுத்தும் அரசு நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவது ஏன்? என்று பலரும் யோசிப்பதில்லை .

Friday, August 6, 2010

போபால் விசவாயு வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் யதார்த்தம்

“ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அழிந்தாலும் கூடப் பரவாயில்லை; ஒரு பணக்காரன் அல்லது அதிகாரி கூடப் பாதிக்கப்படக் கூடாது”

விபத்து நடந்து 26 ஆண்டுகளுக்குப் பின்பு போபால் விசவாயுக் கசிவு வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கும் உயிரினங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலின் அழிவிற்கும் மாசுபடுதலுக்கும் காரணமாக இருந்த அந்த துயர நிகழ்வின் குற்றவாளிகள் 7 பேருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உடனேயே அவர்கள் ஜாமின் கொடுத்து சிறைக்குச் செல்லாமல் வெளியிலும் வந்துவிட்டனர். இந்த விபத்திற்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்திய பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு மற்றும் இந்திய அரசின் கூட்டு முதலீட்டில் உருவான நிறுவனம் ஆகும்.

சந்தைச் சரக்காகக் கல்வியைத் தரம் தாழ்த்திக் கொண்டிருக்கும்,

கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தோழர் ஆனந்தன் ஆற்றிய உரையின் சாராம்சம்:

இந்தக் கருத்தரங்கில் பல கல்விமான்கள் கலந்து கொண்டுள்ளனர். கல்வி குறித்த அவர்களின் கருத்துக்கள் இரு தன்மைகளைக் கொண்டவையாக இருக்கும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன. ஒன்று கல்வி என்றால் என்ன என்பது குறித்த சித்தாந்தபூர்வக் கருத்தோட்டம். மற்றொன்று தற்போது நடைமுறையில் வழங்கப்படும் கல்வி எவ்வாறு முன்பிருந்ததைக் காட்டிலும் சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது; அதனைக் குறைந்த பட்சம் முன்பிருந்த அளவிற்காவது காப்பாற்ற வேண்டும் என்ற கண்ணோட்டம். இவ்விரண்டில் முன்னதை கல்வியாளர்களின் கருத்துக்கே முழுமையாக விட்டுவிட்டுப் பின்னதை மட்டும் எடுத்துப் பேசுவது எனக்குச் சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

 

Total Pageviews