Thursday, March 15, 2012

அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்


பஸ் கட்டண உயர்விற்கு பிறகு பயணம் என்பதே அவ்வளவு இனிமையானதாக சாதாரண மக்களுக்கு இல்லாமல் போயுள்ள இந்த சூழ்நிலையில் பின்வரும் இடர்களையும் சாதாரண மக்கள் சந்திக்க வேண்டி உள்ளது. அவை ;
அரசு பேருந்துகள்:
1.சரியான மாற்றுப் பேருந்து வசதி இல்லை.
2.பேருந்துகள் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை.
3. தொலைதூரப்பேருந்துகளில் இடையில் இறங்கும் பயணிகளை ஏற்ற மறுப்பது.
4. இரண்டு ஓட்டுனர்களை பணியில் அமர்த்தாதது.

Friday, February 17, 2012

19 .02 .2009 - உயர்நீதிமன்றத்தில் காவல் துறையின் கொடூர தாக்குதலுக்கு தீர்வு கிடைக்குமா ?


சென்னை உயர் நீதிமன்றத்தை சாட்டர்டு ஹை கோர்ட் என்று நீதிபதிகளும் , வழக்கறிஞர்களும் பெருமைப்பட்டு கொள்வார்கள். ஆனால் அந்த பெருமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்தது தமிழக காவல் துறை. பிப்ரவரி 19 , 2009 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த காவல்துறை வழக்கறிஞர்கள் , நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள், கட்சிகாரர்கள், மீடியா ரிப்போர்ட்டர்கள் ஆகிய அனைவரின் மண்டைகளையும் உடைத்தது. காட்டுமிரண்டிதனமாக பலரையும் கொடும்காயம் ஏற்படும் வகையில் தாக்கியது. நீதிமன்ற வளாகங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் , நூலகங்கள், வழக்கறிஞர் அலுவலகங்கள் என அனைத்தையும் உடைத்து நொறுக்கி சூறையாடியது. உலக மக்கள் அனைவரும் நேரடி ஒளிபரப்பாக தொலைகாட்சியில் பார்க்கவே இந்த அனைத்து அட்டகாசங்களையும் காட்டுமிராண்டிதனமான தமிழக காவல் துறை அரங்கேற்றியது.

Thursday, February 16, 2012

பிப்ரவரி 19 - கருப்பு தினம்


2009 பிப்ரவரி 19 ல் விழுந்த அடியின் காயம் வேண்டுமானால் ஆறிப்போயிருக்கலாம்; ஆனால் அந்த அவமானம் மறந்து போயிருக்குமேயானால் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்குக்  கூட தகுதி அற்றவர்களாகி விடுவோம். காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல் தற்செயலான  விஷயம் அல்ல. அது ஆளும் அரசாங்கத்தின் உச்சகட்ட கோரதாண்டவம். அரசு என்றால் காவல் துறையும் , ராணுவமும் தான் நீதி மன்றங்களும் ,நீதிபதிகளும் ,  வழக்கறிஞர்களும்  காவல் துறையின் குண்டந்தடிக்கு கட்டுப்பட்டவர்கள், என்று நமக்கு கண்முன்னே நடத்தி காட்டிய நிகழ்ச்சி அது. 
 

Total Pageviews