Thursday, February 16, 2012

பிப்ரவரி 19 - கருப்பு தினம்


2009 பிப்ரவரி 19 ல் விழுந்த அடியின் காயம் வேண்டுமானால் ஆறிப்போயிருக்கலாம்; ஆனால் அந்த அவமானம் மறந்து போயிருக்குமேயானால் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்குக்  கூட தகுதி அற்றவர்களாகி விடுவோம். காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல் தற்செயலான  விஷயம் அல்ல. அது ஆளும் அரசாங்கத்தின் உச்சகட்ட கோரதாண்டவம். அரசு என்றால் காவல் துறையும் , ராணுவமும் தான் நீதி மன்றங்களும் ,நீதிபதிகளும் ,  வழக்கறிஞர்களும்  காவல் துறையின் குண்டந்தடிக்கு கட்டுப்பட்டவர்கள், என்று நமக்கு கண்முன்னே நடத்தி காட்டிய நிகழ்ச்சி அது. 
அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த நீதித்துறைக்கு எதிராக நடந்த இந்தத்  தாக்குதலில் மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் வழக்கு தொடுத்து தீர்வு தேடித்தரும்  வழக்கறிஞர்கள் தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு ஒரு கடைநிலை காவல் துறையினரை கூட சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியவில்லை என்பது மிகவும் அவமானகரமான விஷயம் ஆகும். இனியும், பொறுமை காத்து இருப்போமானால் நம்மை வரலாறு சுரணையற்றவர்களாகவே  பதிவு செய்யும்.

தனியொரு வழக்கறிஞரை தனியொரு காவல்துறை அதிகாரி தாக்கிய பல பிரச்னைகளில் நமது வழக்கறிஞர் ஒற்றுமையின் மூலம் நாம் கடந்த காலங்களில் பல வெற்றிகளை சாதித்துள்ளோம். ஆனால் அரசினால் திட்டமிட்டு ஏவி விடப்பட்ட காவல் துறையின்  தாக்குதலினால் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டும் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில் அரசை அசைத்துப் பார்க்க வேண்டுமானால் இதுபோல் அரசால் பாதிக்கப்பட்டு நிற்கும் கோடான கோடி உழைக்கும் மக்களுடன் நாம் கைகோர்க்க வேண்டும். சட்டத்தின் உரிமைகளைப் பெற முடியாமல் தவிக்கும் மக்களுடன் - அம்மக்களின் இயக்கங்களுடன் அணி சேர்வோம். 


நம் மீது தாக்குதல் தொடுத்த ஒவ்வொரு காவல்துறை அதிகாரிக்கும்  தண்டனை வாங்கி தருவோம்.

நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகிடைக்கும் வரை நமது போராட்டம் ஓயாது தொடர வேண்டும்

தூங்கி கிடக்கும் வழக்கறிஞர் சங்கங்களை தட்டி எழுப்புவோம்

விழித்தெழுவோம், போராடுவோம் , வெற்றியடைவோம்

--------------------------------------------------------------------------------------------------------------------------
Lawyers Forum for Social Movement (LFSM), TAMIL NADU
சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு
Bridge the gap existing between legality and legitimacy by giving rise to social movement 
தொடர்பிற்கு :உயர் நீதிமன்றம், மதுரை த.சிவகுமார் - 94430 80634
கே.கே.சாமி - 99438 13105 உயர் நீதிமன்றம் ,சென்னனைகு.கதிரேசன் - 98434 64246

Comments :

0 comments to “பிப்ரவரி 19 - கருப்பு தினம்”


Post a Comment